புதன், 14 ஜனவரி, 2015

பொங்கல் நன்றி காட்டும் நல்ல நாளாம் பொங்கல்-ஆசிரியர் வாய்ஸின் அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

உழவர்கள் நெல் அறுவடை செய்து மகிழ்ந்திருக்கும் வேளையில், விவசாயத்திற்கு துணைபுரிந்த சூரியன், பணியாட்கள் மற்றும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் அமைந்த விழா பொங்கல் விழா. சூரியன் தன் செங்கதிர்களால் உலகிற்கு ஒளியூட்டுகிறார். கடல்நீரை ஆவியாக்கி மழை பொழியச் செய்கிறார். கிருமிகளை அழித்து ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிகாட்டுகிறார். மண்ணில் உயிர்கள் வாழ்வதற்கு வேண்டிய உதவிகளைச் செய்கிறார். அவருக்குரியதாக இந்த நாள் அமைந்துள்ளது. சூரியனுக்குரிய நாளாக தைப்பொங்கலும், கால்நடைகளுக்குரிய நாளாக மாட்டுப்பொங்கலும், உறவினர்,நண்பர்கள், வேலையாட்களைப் பாராட்டும்விதத்தில் காணும்பொங்கலும் அமைந்துள்ளன.
14.01.2015 புதன்கிழமை
போகிப்பண்டிகை.அன்று இரவு 10 மணிக்கு தைமாதம் பிறக்கிறது.விளக்கேற்றி வழிபடும் வழக்கம் உள்ளவர்கள் செய்யலாம்.
15.01.2015 வியாழக்கிழமை
பொங்கல் பண்டிகை.காலை 9.30மணிக்கு மேல்10.30 மணிக்குள் பொங்கல் வைக் நல்ல நேரம்.பகல் 12.0 மணிக்கு பூஜை செய்து 1.30 மணிக்குள் சாப்பிட நன்று.உத்தராயண புண்யகாலமும் அன்றே செய்ய வேண்டும்.
16.01.2015 வெள்ளிக்கிழமை
மாட்டுப்பொங்கல். அன்று காலை 6.0மணிக்கு மேல் 7.0மணிக்குள் பெண்கள் புதுமஞ்சள் உபயோகிக்கவும் கனு வைக்கவும் நன்று.காலை 9.0மணிக்கு மேல் 10.0 மணிக்குள் பொங்கல் வைக்கவும் 12.0 மணிக்குமேல் கோபூஜை செய்து வழிபடவும் நன்று.
இந்திய நேரப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டு அன்பர்கள் அந்தந்த நாட்டு உதயத்தைக்கணக்கிட்டு மாற்றிக்கொள்ளவும்.
அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்