SANGAM லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
SANGAM லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 6 அக்டோபர், 2015

3.50 லட்சம் ஆசிரியர்கள் 8ம் தேதி வேலை நிறுத்தம் :

3.50 லட்சம் ஆசிரியர்கள் 8ம் தேதி வேலை நிறுத்தம் : தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை, தொடக்க கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள்,உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் என சுமார் 3.50 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். 6வது ஊதிய குழுவின் அனைத்து படிகளையும் வழங்க வேண்டும். தன் பங்கேற்பு ஊதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு தமிழகத்தில் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் தொடக்கப் பள்ளிகளை மூடுவதை கைவிட வேண்டும் என்பன உட்பட 15 அம்ச கோரிக்கைகளை ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜேக்டோ) கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட 27 சங்கங்கள் இடம் பெற்றுள்ளன. ஜேக்டோ அமைப்பினர் அப்போதைய முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்த அனுமதி கோரினர். பேச்சுவார்த்தைக்கு ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்தார். எனினும் குறிப்பிட்ட படி பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை.
இதையடுத்து கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மார்ச் 8ல் தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பேரணி, ஏப்.19 ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரத போராட்டங்களை ஜேக்டோ அமைப்பினர் நடத்தினர். ஆக.1ம் தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்துப் பேசினார். பல்வேறு போராட்டங்களுக்கு பிறகும் ஜேக்டோ அமைப்பினருடன், தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த முன் வரவில்லை. இதையடுத்து தமிழகம் முழுவதும் வருகிற 8ம் தேதி 3.50 லட்சம் ஆசிரியர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக அனைத்து ஆசிரியர் சங்கங்களும் தயாராகி வந்த நிலையில், நேற்று இரவு 9 மணிக்கு தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் ஜேக்டோ ஒருங்கிணைப்பாளர் இளங்கோவனை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அப்போது சென்னையில் உள்ள டிபிஐ வளாகத்தில் இன்று மாலை 4 மணிக்கு பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்க கல்வி இயக்குநர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலையில் ஜேக்டோ அமைப்பினருடன் நடந்த முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.திட்டமிட்டப்படி அக்டோபர் 8ல் வேலை நிறுத்தம் தொடரும்
தொடர்ந்து வாசிக்க →
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

வியாழன், 3 செப்டம்பர், 2015

திருவோணம் ஒன்றியத்தில் வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்ட 91 TNPTF-ன் இரும்புத் தூண்களின் பெயர் பட்டியல் CRC & School & Designation வாரியாக பட்டியல்..



தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள்- 23
இ.நி.ஆசிரியர்கள்- 61
நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்- 2
பட்டதாரி ஆசிரியர்கள் -5
வெட்டிக்காடு CRC-23
————–———————
பின்னையூர் :
1. மதியழகன்- இ.நி.ஆ
2. கிருஷ்ணவேணி- த.ஆ
3. ஜோதிலெட்சுமி- இ.நி.ஆ
காலிங்கராயர்தெரு :
4. பூங்கோதை- த.ஆ
5. பாலாமணி- இ.நி.ஆ
திருநல்லூர் :
6. ராஜேஸ்வரி- இ.நி.ஆ
7. உஷா நந்தினி- இ.நி.ஆ
அய்யனார்புரம் :
8. மும்தாஜ்- த.ஆ
சில்லத்தூர்-தெற்கு :
9. செந்தாமரை- த.ஆ
10. சத்யா- இ.நி.ஆ
சில்லத்தூர்-வடக்கு :
11. பத்மாவதி-இ.நி.ஆ
12. பிரகாஷ்- இ.நி.ஆ
13. மேரிபுஷ்ப அனிதா-இ.நி
14.முத்தமிழ்ச்செல்வி-இ.நி.ஆ
வெட்டிக்காடு :
15. கிறிஸ்டி- த.ஆ
16. உமா- இ.நி.ஆ
17. சின்னப்பன்- இ.நி.ஆ
18. ஜாக்குலின்- இ.நி.ஆ
19. மெர்சி- இ.நி.ஆ
அக்கரைவட்டம் :
20. முத்துராமன் -இ.நி.ஆ
21. சகிலாதேவி- இ.நி.ஆ
22. விஜயலெட்சுமி- இ.நி.ஆ
23. ஆனந்த்- ப.ஆ
சோழகன்குடிகாடு CRC -16
————————————————
சதுர்காடு :
24. கலைவாணி- த.ஆ
25. தேவராஜன்- இ.நி.ஆ
26. கிரேஸ்லீலா- இ.நி.ஆ
சோழகன்குடிகாடு :
27. மெட்டில்டா ஜூலியட்-த.ஆ
28. கல்பனா- இ.நி.ஆ
திப்பியக்குடி :
29. மாரிக்கண்ணு- த.ஆ
30.ராமகிருஷ்ணமூர்த்தி-இ.நி
சங்கரன்தெரு :
31. ரமணி- இ.நி.ஆ
மேடையக்கொல்லை :
32. கோமளாதேவி- த.ஆ
33. பிரியா- இ.நி.ஆ
சோழகன்கரை :
34. சுகன்யா- இ.நி.ஆ
சங்கரநாதர் குடிகாடு :
35. சொரூபராணி -இ.நி.ஆ
பொய்யுண்டார் குடிகாடு :
36. திவ்யா- இ.நி.ஆ
37. தீபவர்ஷா- இ.நி.ஆ
தெற்குகோட்டை :
38. வில்லியம்- இ.நி.ஆ
வேதநாயகிபுரம் :
39. டெஸ்கோலா- இ.நி.ஆ
புதுத்தெரு CRC -15
———————————
காரியாவிடுதி :
40. சின்னத்துரை- த.ஆ
41. விமலா டார்வின்- இ.நி.ஆ
42. நஸிமா பேகம்- இ.நி.ஆ
கண்டியநாச்சி :
43. பாக்கியராஜ்- இ.நி.ஆ
44. ஜெயந்தி- இ.நி.ஆ
உஞ்சியவிடுதி :
45. நல்லம்மாள்- இ.நி.ஆ
வெள்ளத்தேவன் விடுதி :
46. அக்ஸிலியா
அருள்ஜோதி- த.ஆ
சின்னமாங்குடி :
47. துரைராஜ்- த.ஆ
48. லெட்சுமி- இ.நி.ஆ
49. மேரிகிருஸ்துராணி-இ.நி
இராஜாளி விடுதி :
50. சவரியம்மாள்- த.ஆ
51. ரிட்டு பிரீத்தி- இ.நி.ஆ
புதுத்தெரு :
52. சித்ரா- த.ஆ
இலுப்பை விடுதி :
53. சந்திரகுமாரி- த.ஆ
54. முனீஸ்வரி-இ.நி.ஆ
பில்லுவெட்டு விடுதி CRC -13
—————————————————
பணிகொண்டான் விடுதி :
55. வித்யாலெட்சுமி- த.ஆ
56. ஜெயராணி- இ.நி.ஆ
பில்லுவெட்டு விடுதி :
57. ஆனந்த்குமார்- இ.நி.ஆ
58. ஜாக்குலின்- ப.ஆ
செவ்வாய்பட்டி :
59. சேவியர் - த.ஆ
காடுவெட்டி விடுதி :
60. முருகராஜ்- இ.நி.ஆ
61. சந்தோஷ்- இ.நி.ஆ
திருவோணம் :
62. குமார் - த.ஆ
63. சதீஸ்குமார் - இ.நி.ஆ
64. சோபியா- இ.நி.ஆ
சிவவிடுதி :
65. அன்புவிழி - இ.நி.ஆ
66. டாரத்தி - இ.நி.ஆ
மணிக்கிரான் விடுதி :
67. திருமேணிநாதன்-இ.நி.ஆ
வெங்கரை CRC- 15
————————————
திப்பன்விடுதி :
68. ரவிச்சந்திரன்- ந.த.ஆ
69. ரெங்கநாயகி- ப.ஆ
70. கோவிந்தராஜ்- ப.ஆ
71. சாந்தி- இ.நி.ஆ
72. பிரீத்தா- இ.நி.ஆ
வெங்கரை :
73. அய்யாத்துரை- ந.த.ஆ
74. மணிகண்டன்- இ.நி.ஆ
75. கோமதி- இ.நி.ஆ
76. தாயம்மாள் - இ.நி.ஆ
மாஞ்சாக்காடு :
77. சரஸ்வதி -த.ஆ
78. ரஞ்சிதம் செலின் -இ.நி.ஆ
காயாவூர் :
79. பிரேம்நாத்- இ.நி.ஆ
80. மணிமேகலை- இ.நி.ஆ
சென்னியவிடுதி :
81. கண்ணன்- இ.நி.ஆ
இடையங்காடு :
82. செல்வராணி- இ.நி.ஆ
நெய்வேலி CRC- 5
———————————
நெய்வேலி-தெற்கு :
83. சுவாமிநாதன்- த.ஆ
84. கனகா- இ.நி.ஆ
நெய்வேலி-மேற்கு :
85. மனோகரி- இ.நி.ஆ
நெய்வேலி-வடக்கு :
86. வெங்கடேசன்- ப.ஆ
கள்ளந்தெரு :
87. ஜான்சி- இ.நி.ஆ
கொள்ளுக்காடு CRC - 4
——————————————
மேலகொள்ளுக்காடு:
88. சுகுனா- த.ஆ
கட்டத்தில் உஞ்சியவிடுதி:
89. புளோரா- த.ஆ
பட்டுவிடுதி :
90. லூர்துடெய்சி- த.ஆ
91. மோகனபுஷ்பலீலா-இ.நி
தொடர்ந்து வாசிக்க →
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

TNPTF strike participater list district wise


TNPTF strike participater list district wise
1) Dindukal- 926.
2) velour - 920.
1) Erode-509.
2)Puthukottai-530.
3) Thanjavur -240.
4)karur-599.
5)villupuram-350.
6)Namakkal-385.
7)CUDDALORE-105
தொடர்ந்து வாசிக்க →
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

Yesterday strike Record break:


Total participated-9878
school closed-732
Highest participated dt Dindukkal-926
Next Vello-920
Union leval highest Gudalur-262
தொடர்ந்து வாசிக்க →
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

புதன், 2 செப்டம்பர், 2015

அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டம் கடலூர் மாவட்ட பதிவு

-பண்ருட்டி ஒன்றியம்-49,திருமுட்டம் ஒன்றியம்-17,காட்டுமன்னார்கோயில் ஒன்றியம்-37,கடலூர் ஒன்றியம்-1,மங்களூர் ஒன்றியம்-1
தொடர்ந்து வாசிக்க →
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

என் தோழனே



காலுக்குச் செருப்புமில்லை
கால்வயிற்றுக் கூழுமில்லை
பாழுக் குழைத்தோமடா - என் தோழனே
பசையற்றுப் போனோமடா! (காலுக்குச்...)
குண்டிக்கொரு துண்டுமில்லை
கொல்வறுமை தாளவில்லை
ஒண்டக் குடிசையுமில்லை - என் தோழனே
உழைத்திளைத் தோமேயமடா (காலுக்குச்...)
நோய் நொடிகள் வெம்புலிபோல்
நூறுவிதம் சீறுவதால்
தாய்தந்தையர் பெண்டுபிள்ளை - என் தோழனே
சாய்ந்து விழக் கண்டோமடா! (காலுக்குச்...)
பாலின்றிப் பிள்ளை அழும்
பட்டினியால் தாய் அழுவாள்
வேலையின்றி நாம் அழுவோமே - என் தோழனே
வீடு முச்சூடும் அழும் (காலுக்குச்...)
கையிலொரு காசுமில்லை
கடன்கொடுப்பார் யாருமில்லை
செய்யும்தொழில் கிட்டவில்லை - என் தோழனே
திண்டாட்டம் கொல்லுமடா! (காலுக்குச்...)
வாங்கிய கடன் தீர்க்க
வக்கில்லை யானாலும்
ஏங்கி இரந்துண்ணவோ - என் தோழனே
எங்கள் மனம் கூசுதடா! (காலுக்குச்...)
கொச்சைப் பிழைப்பறியோம்
கொலைதிருட்டு அறியோம்
இச்சகப் பேச்சறியோம் - என் தோழனே
எத்தும் புரட்டறியோம் (காலுக்குச்...)
கோணல்மானல் திட்டங்களால்
கோடிகோடி யாயிக்குவித்தே
வீணர்சிலர் கொழுக்கக் கண்டோம் - என் தோழனே
வெஞ்சினம் பொங்குதடா! (காலுக்குச்...)
மாடமாளி கையவர்க்கு
மன்னர்மகு டமவர்க்கு
வாடவறு மைநமக்கு - என் தோழனே
வந்திடில் வாழ்வதெற்கு? (காலுக்குச்...)
ஒன்றுபட்டு போர்புரிந்தே
உயர்த்துவோம் செங்கொடியை
இன்றுடன் தீருமடா - என் தோழனே
இம்சை முறைகளெல்லாம் (காலுக்குச்...)
தொடர்ந்து வாசிக்க →
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

செவ்வாய், 1 செப்டம்பர், 2015

தோழா நாளை [செப்டம்பர்-2]

CPS திட்டத்திற்கு எதிரான அகில இந்திய அலவில் வேலை நிறுத்த போராட்டம்...
இடைநிலை ஆசிரியர்களை ஏமாற்றிய இந்த தமிழக அரசுக்கு நமது வலிமையை புரிய வைக்க இந்த வேலை நிறுத்த போராட்டம்...
நம் நாட்டையும், நாட்டு மக்களையும் காப்பாற்ற இந்த வேலை நிறுத்த போராட்டம்...
இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்க்கும் நாம் நமது வலிமையை இந்த FACEBOOK மூலமும் காட்ட!
இந்த வீரம் மிக்க போரட்ட களத்திற்கு தைரியமுடன் அனைவரையும் பங்கேற்க செய்ய!!
இப் போராட்டத்தை சிதைக்க ஒலிக்கும் பொய் கதைகளை உடைத்து எறிய
இந்த வீரம் செறிந்த போராட்டத்தில் பங்கேற்கும் தோழர்கள் பெயரையும் அவர்கள் பள்ளியில் பங்கேற்கும் தோழர்கள் பெயரையும் இங்கு பதிவு செய்து
நமது ஒற்றுமையை காட்டுவோம்!
நாளை போராட்டாத்தை நாம் நாட்டின் வரலாற்றில் இடம் பெற செய்வோம்!!!
தொடர்ந்து வாசிக்க →
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

காஞ்சீபுரம், திருவள்ளூரில் பகுதி நேர ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

T
காஞ்சீபுரம்,
தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் வெ.முருகதாஸ் தலைமையில் பகுதி நேர ஆசிரியர்கள் காஞ்சீபுரம் காவலான் கேட் அருகே கவன ஈர்ப்பு முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
படித்து வேலை இல்லாமல் இருந்த பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களை பகுதி நேர ஆசிரியர்களாக பணி நியமனம் செய்த தமிழக முதல்–அமைச்சருக்கு நன்றி தெரிவித்தும், பகுதிநேர ஆசிரியர்கள் அனைவரையும் பள்ளிக்கல்வித்துறைக்கு மாற்றி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் அவர்கள் கோஷமிட்டனர். இதில் மாவட்ட செயலாளர் சீனுவாசன், மாநில துணைத்தலைவர் பாஸ்கரன், ஜெய்சங்கர், தினகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு தமிழக பகுதி நேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து 100–க்கும் மேற்பட்ட அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.
பின்னர் இது தொடர்பான புகார் மனுவை மாவட்ட கலெக்டர் கொ.வீரராகவராவிடம் வழங்கினார்கள். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
தொடர்ந்து வாசிக்க →
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

திங்கள், 31 ஆகஸ்ட், 2015

சம்பளப் பட்டியல் & ஊதிய நிலுவைத் தொகை விவரம் நாமே அறியலாம்.

CHECK YOUR PAY STATUS :-
அகவிலைப்படி ஊதிய நிலுவைத் தொகை பெற்றுவிட்டீர்களா?
அலுவலகத்தைத் தொடர்பு கொண்டால், ஊதியப்பட்டியல் கருவூலத்தில் சமர்ப்பித்துவிட்டோம் என்று இழுத்தடிக்கிறார்களா?
கருவூலத்தில் ஊதியப் பட்டியல் சமர்பிக்கப்பட்டதா?
எந்த நாளில் சம்பளம் வரவு வைக்கப்படும் போன்ற தகவகல்களை நீங்களே இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.


1. www.treasury.tn.gov.in/Public/ ecstokenno.aspx என்ற தளத்திற்குச் செல்லவும்.

2. உங்களது மாவட்டத்தினைத் தெரிவு செய்யவும்.

3. Sub treasury ஐத் தெரிவு செய்யவும்.

4. Select branch என்னும் பகுதிக்கு அருகில் உள்ள கட்டத்தில் உங்கள் வங்கியின் MICR code ஐப் பதிவு செய்யவும்.
(உங்கள் காசோலைப் புத்தகத்தில் பார்த்தால் தெரியும்)

5. உங்கள் வங்கிக் கணக்கு எண்ணைப் பதிவு செய்யுங்கள். அவ்வளவு தான் நண்பர்களே!

எந்த தேதியில் உங்கள் அலுவலர் கருவூலத்தில் ஊதியப்பட்டியலைச் சமர்பித்தார், எந்த தேதியில் அது காசாக்கப்படும் என அறியலாம்.

மேலும் கடந்த காலத்தில் நீங்கள் பெற்ற ஊதிய விபரங்களையும் அறிய முடியும்.
தொடர்ந்து வாசிக்க →
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

Computer Instructor Transfer Regarding

தொடர்ந்து வாசிக்க →
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

முற்றுகையை தொடர்ந்து 10 இடங்கள் அதிகரிக்கப்பட்டது குமரியில் 28 காலியிடம் மறைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு :

ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு திடீர் நிறுத்தம்-நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் காலியிடங்கள் மறைக்கப்பட்டதை கண்டித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் இடைநிலை ஆசிரியர் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு நிறுத்தப்பட்டது. குமரி மாவட்டத்தில், மாவட்டத்திற்குள் இடைநிலை ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு நேற்று நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் நடந்தது. மொத்தம் 68 ஆசிரியர் காலி பணியிடங்கள் இருந்தன. ஆனால் 40 இடங்கள் மட்டுமே இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 28 இடங்கள் மறைக்கப்பட்டன. இதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கல்வித்துறை அதிகாரிகள், இதுதொடர்பாக உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினர். அப்போது, ‘40 இடங்களை கொண்டு கலந்தாய்வை நடத்தினால்போதும், இல்லையெனில் கலந்தாய்வை நிறுத்திவிடுங்கள்’ என்று கூறியுள்ளனர்.
காலியிடங்களை மறைத்து கலந்தாய்வு நடத்துவதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கலந்தாய்வு நிறுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து கலந்தாய்வு அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன்பின்னர் மேலும் 10 காலியிடங்கள் அதிகரிக்கப்படுவதாக தெரிவித்தனர். மீண்டும் கலந்தாய்வு மாலை 3 மணிக்கு பிறகு நடத்தப்பட்டது. இதுகுறித்து ஆசிரியர்கள் கூறும்போது, ‘வெளி மாவட்டங்களில் பணிபுரியும் ஆசிரியர்களை கொண்டு 18 இடங்கள் மறைமுகமாக நிரப்பப்படும் எனவும், இதில் லட்சக்கணக்கில் பணம் புரளும் என்றும் தெரிவித்தனர். வேலூரில் அதிகாரியை முற்றுகை: வேலூர் டான்போஸ்கோ பள்ளியில் தொடக்கக்கல்வி இடைநிலை ஆசிரியர்களின் இடம் மாறுதல் கலந்தாய்வு நேற்று நடந்தது. அப்போது தலைமையாசிரியர் பணியிடம் நேரடியாக நிரப்பப்பட்டுள்ளது.
கல்வி அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக்கொண்டு பணியிடங்களை நடத்தினால் எதற்காக கலந்தாய்வு நடத்துகிறீர்கள்? என்று ஆசிரியர்கள் வாக்குவாதம் செய்தனர். போலீசார் தலையிட்டதையடுத்து. தொடக்க கல்வி துணை இயக்குனர் பொன்அருண்பிரசாத் வந்து நேரடி நிர்வாக மாறுதலுக்கான ஆணையை வெளியிடுவதாக கூறினார். ஆனால் மாலையில் வெளியிடவில்லை. அதை கேட்டதற்கு ‘நான் எந்த ஆணையும் வெளியிட முடியாது. உங்களால் முடிந்தால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் போய் கேளுங்கள்’ என்று கூறினார். இதனால் ஆவேசம் அடைந்த ஆசிரியர்கள், அவரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சில ஆசிரியர்கள், ‘நாங்கள் இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளோம்’ என்று கூறிவிட்டு, தங்களது ஆணையை வாங்கி சென்றனர்.
ஆசிரியர்களிடையே தள்ளுமுள்ளு
ராமநாதபுரத்தில் கவுன்சலிங் நேற்று மதியம் 2 மணிக்கு துவங்கியது. அப்போது ஏற்கனவே நிரப்பப்பட்ட டி.வேப்பங்குளம் பள்ளி தலைமையாசிரியர் பணியிடத்தை காலிப் பணியிடமாக அறிவிக்க கோரி ஒரு பிரிவினரும் அதை எதிர்த்து மற்றொரு பிரிவு ஆசிரியர்களும் வாக்குவாதம் செய்ததால், ஆசிரியர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தொடர்ந்து வாசிக்க →
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

காலிப்பணிடம் மறைக்கப்பட்டதாக புகார் கவுன்சலிங்கை புறக்கணித்ததால் பரபரப்பு

நாமக்கல்: காலிப்பணியிடங்கள் மறைக்கப்பட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், கவுன்சலிங்கை புறக்கணிப்பு செய்து, திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால், நாமக்கல்லில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாவட்டத்தில் உள்ள, 39 காலிப்பணியிடங்களுக்களில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு, மாவட்டத்துக்குள் இடமாறுதல் கவுன்சிலில் நேற்று நடந்தது. நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ் தலைமை வகித்தார்.
அதில், தமிழ், இயற்பியல், வேதியியல், கணிதம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில், ஒன்பது காலிப்பணியிடங்கள் மறைக்கப்பட்டாக புகார் எழுந்தது. அதனால், அதிர்ச்சி அடைந்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், 100க்கும் மேற்பட்டோர், கவுன்சிலிங்கை புறக்கணிப்பு செய்து, கவுன்சலிங் நடந்த அறை முன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதியம், 1 மணிக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ், ஆசிரியர்களை சமாதானம் செய்தார். அதை தொடர்ந்து, 2 மணிக்கு கவுன்சலிங்கில் கலந்து கொண்டனர். இச்சம்பவம், நாமக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டச் செயலாளர் ராமு கூறியதாவது: காலையில் கம்ப்யூட்டர் திரையில் காலியிடங்களாக அறிவிக்கப்பட்ட பணியிடங்கள், கவுன்சலிங்கிற்கு முன் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்ட காலிப்பணியிட பட்டியலில் மறைக்கப்பட்டுள்ளது. அவற்றை தவிர்த்து, அனைத்து இடங்களுக்கும் முறையாக கவுன்சலிங் நடத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார். நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸிடம் கேட்டபோது, ""எந்த காலியிடமும் மறைக்கப்படவில்லை; பாடவாரியாக அனைத்து ஆசிரியர்களுக்கும் கவுன்சலிங் நடத்தப்பட்டது. அதில், 17 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு, இடமாறுதல் அளிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
தொடர்ந்து வாசிக்க →
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

அமைச்சு பணியாளர்கள் கலந்தாய்வு புறக்கணிப்பு இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கரூர்: கரூர் குமரன் உயர்நிலைப்பள்ளியில் நடந்த கலந்தாய்வை, கல்வித்துறை அமைச்சுப் பணியாளர்கள் புறக்கணித்ததாக கூறி, ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் மாவட்டத்தில் உள்ள, எட்டு யூனியன்களில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல், ஒன்றியத்துக்குள் மாறுதலுக்கான கலந்தாய்வு, கரூர் குமரன் உயர்நிலைப்பள்ளியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சுப் பணியாளர் அனைத்து சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில், கல்வித்துறை அமைச்சுப் பணியாளர்களை தரக்குறைவாக பேசிய, தேவர்மலை பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பெரியசாமியை கண்டித்து, ஆர்ப்பாட்டம் மற்றும் கலந்தாய்வு புறக்கணிப்பு செய்தனர்.
கரூர் மாவட்டத்தில் பணியாற்றும், எட்டு யூனியன்களை சேர்ந்த இடைநிலை ஆசிரியர்கள், நேற்று காலை முதலே, கரூர் குமரன் உயர்நிலைப்பள்ளிக்கு வந்தனர்.
அப்போது, பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் குப்புசாமி, டி.இ.ஓ., கண்ணகி ஆகியோர் மட்டும் பள்ளியில் இருந்ததாகவும், கலந்தாய்வு செய்யும் அதிகாரிகள் இல்லை என்று, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கத்தினர், நிர்வாகிகள் தலைமையில் தனித்தனியாக குற்றம்சாட்டினர்.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கத்தினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, இணை இயக்குனர் குப்புசாமி, டி.இ.ஓ., கண்ணகி அமர்ந்திருந்த அறையை முற்றுகையிட்டு, அறை முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் அமைதி காத்தனர்.
இதற்கிடையே, 12.30 மணிக்கு, கல்வித்துறை அமைச்சுப் பணியாளர்கள், பள்ளிக்கு வந்து, ஆசிரியர்கள் போராட்டம் நடத்த எவ்வாறு அனுமதி வழங்கினர், என போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி., பெரிய்யய்யா பேச்சுவார்த்தை நடத்திய பின், கலைந்து சென்றனர்.
இதற்கிடையில், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கத்தை சேர்ந்தவர்களுடன், போலீஸார் நடத்திய பேச்சு வார்த்தைக்கு பின், போராட்டத்தை கைவிட்டு, கலந்தாய்வில் பங்கேற்பதாக அறிவித்தனர்.
அப்போது, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை சேர்ந்த நிர்வாகிகள், இணை இயக்குனர் குப்புசாமியிடம் சென்று, அரசு விதிமுறைப்படி கலந்தாய்வு நடத்த வேண்டும், என பிரச்னை எழுப்பியதால், மீண்டும் பிரச்னை உருவானது. அரை மணி நேரம் நடத்த பேச்சு வார்த்தைக்கு பின், எவ்வித முறைகேடும் இல்லாமல், கலந்தாய்வு நடத்தப்படும், என இணை இயக்குனர் குப்புசாமி உறுதி அளித்ததின் பேரில், நிர்வாகிகள் கலைந்து சென்றனர்.
இணை இயக்குனர் குப்புசாமி கூறுகையில்,""கலந்தாய்வு நடத்துவற்காக, காலை, 9.45 மணிக்கு, நான் வந்து விட்டேன். அதிகாரிகள் அனைவரும் தயார் நிலையில் உள்ளனர். ஆசிரியர்கள் கலந்தாய்வில் பங்கேற்காமல், புறக்கணிப்பு செய்தனர்,'' என்றார்.
தொடர்ந்து வாசிக்க →
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

வெள்ளி, 3 ஏப்ரல், 2015

சிறப்பாசிரியர் போட்டித் தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரக் கோரிக்கை



சிறப்பாசிரியர்களின் போட்டித் தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டுமென தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்க மாநிலத் தலைவர் ராஜ்குமார் தெரிவித்துள்ளதாவது:

தமிழகத்தில் பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு முன் தேதியிட்டு அறிவிக்கப்பட்ட ஊதியத்தை நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதி நேர ஆசிரியர்களுக்கும் வங்கி வரைவோலையாக வழங்கியதற்கு சங்கத்தின் சார்பில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது. அதேபோல, பகுதி நேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய  வேண்டும் என்ற கோரிக்கையையும் கலை ஆசிரியர் சங்கம் முதல்வரின் பரிசீலனைக்கு அனுப்பியுள்ளது.

இந்நிலையில், சிறப்பாசிரியர்களுக்கான ஓவியத் தேர்வு பாடத்திட்டம் மிகவும் கடுமையாக உள்ளதால் இப்பாடத் திட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என ஏற்கெனவே முதல்வரின் தனிப்பிரிவிற்கும் கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது. சிறப்பாசிரியர் பணி நியமனத்திற்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி, தேர்வுத் துறையில் தொழில்நுட்பத் தேர்வு தேர்ச்சி, பள்ளிக் கல்வி இயக்குநரால் நடத்தப்படும் டிடிசி எனப்படும் தொழிலாசிரியர் சான்றிதழ் பயிற்சி என்பவற்றின் அடிப்படையில் நியமனம் என்பதே நடைமுறையாகும்.

ஆனால், தற்போது போட்டித் தேர்வு முறையை அரசு அறிமுகப்படுத்தியுள்ளதால் இதற்கான போட்டித் தேர்வு பாடத்திட்டத்தை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த ஓவியப் பாடத்திட்டத்திற்கான புத்தகங்கள் கிடைப்பதில்லை.

இந்நிலையில், சிறப்பாசிரியர்களுக்கு போட்டித் தேர்வு ஜுன் மாதத்தில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வாணையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கலை ஆசிரியர் நலச் சங்கத்தின் சார்பில் முதல்வர், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், அரசு செயலர், இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. அதில், தாங்கள் படித்த படிப்பிற்கு தொடர்பில்லாத பாடத் திட்டம் இப்போட்டித் தேர்வில் இடம் பெறக்கூடாது எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இப்பாடத் திட்டத்தில் மாற்றம் கொண்டுவர முடியாவிட்டால் போட்டித் தேர்வை நீக்கிவிட்டு, மாநிலப் பதிவு முன்னுரிமையை மீண்டும் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க →
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

வியாழன், 2 ஏப்ரல், 2015

இயக்குநர்களுடன் ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் சந்திப்பு.

01.04.2015 தொடக்கக் கல்வி இயக்குநர் முனைவர் ரெ.இளங்கோவன், பள்ளிக்கல்வி இயக்குநர் முனைவர் ச. கண்ணப்பன், RMSA இயக்குநர் முனைவர் க. அறிவொளி, தேர்வுத்துறை இயக்குநர் திரு. கு. தேவராஜன், SCRT இயக்குநர் முனைவர் வி.சி. ராமேஸ்வர முருகன், ஆசிரியர் தேர்வாணையஉறுப்பினர் செயலாளர் திருமதி. தன். வசுந்தராதேவி ஆகியோரை ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் வா. அண்ணாமலை அவர்கள் சந்தித்தார்.

ஏப்ரல் 11 ஆம் தேதி திருச்சியில் நடைபெற உள்ள ஐம்பெரும் விழாவில் 1000 பக்கங்கள் கொண்ட அரசாணைகள் தொகுப்பு வெளியிடுவது பற்றி இயக்குநர்களிடம் கலந்துரையாடினார். இந்த முயற்சியை வரவேற்று, பாராட்டி வாழ்த்து தெரிவித்து தங்களது புகைப்படத்துடன் கூடிய வாழ்த்துக் கடிதங்களை அனைத்து இயக்குநர்களும் வழங்கினார்கள்.இந்த சந்திப்பின் போது தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநில துணைத் தலைவர் தம்பு. இராமதாஸ் உடன் இருந்தார்.
தொடர்ந்து வாசிக்க →
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

செவ்வாய், 24 மார்ச், 2015

தேர்வு நேரத்தில் PGTRB கவுன்சிலிங் ஏன்? முதுகலை ஆசிரியர் கழகம் கேள்வி

தொடர்ந்து வாசிக்க →
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

வியாழன், 19 மார்ச், 2015

அரசுப்பள்ளிகளை மூடி அதன் மாணவர்களை தனியாருக்கு தாரை வார்ப்பது சரியானதா??- வரும் ஞாயிறு 1மணிக்கு கலைஞர் தொலைக்காட்சி

ஆசிரியர் சொந்தங்களே கலைஞர் தொலைக்காட்சியில், அரசுப்பள்ளிகளை மூடிவிட்டு அதன் மாணவர்களை தனியாருக்கு தாரை வார்ப்பது சரியானதா என்கிற தலைப்பில் சிறப்பு விருந்தினராக ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் உரிமைக்கழக மாநிலதலைவர் செல்லத்துரை அவர்கள் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி அவர்கள் , பல்வேறு ஆசிரியர் அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டு விவாதம் நடத்தினார்கள்..

இந்நிகழ்ச்சி வரும் ஞாயிறு 22.03.2015 அன்று பிற்பகல் 1மணி அளவில் நெஞ்சுப்பொறுக்குதில்லையே பகுதியில் ஒளிப்பரப்பாகின்றன....

இதில் மாநில தலைவர் செல்லத்துரை அவர்கள் இன்றைய ஆசிரியர்களின் நிலை, வேலைவாய்ப்பு, காலிப்பணியிடம், ஆசிரியர்களின் எதிர்கால நிலை, ஆசிரியர்களின் மனக்குமுறல் குறித்து புள்ளிவிவரத்தோடு எடுத்துரைக்கிறார் காணத்தவறாதீர்கள்....

இப்படிக்கு
பி.இராஜலிங்கம் மாநிலப்பொருளாளர்
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் உரிமைக்கழகம்  ..

தொடர்ந்து வாசிக்க →
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

செவ்வாய், 17 மார்ச், 2015

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வாக்குறுதி அளிப்பவருக்கே ஆதரவு: மத்திய, மாநில அரசு ஊழியர்கள் சங்கக் கூட்டத்தில் முடிவு

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வாக்குறுதி அளிப்பவருக்கே ஆதரவு தர மத்திய, மாநில அரசு ஊழியர்கள் திட்டமிட்டுள்ளனர். இதுதொடர்பாக கடந்த 4-ம் தேதி நாக்பூரில் நடந்த கூட்டத்தில் இதற்கான முடிவை ஊழியர்கள் சங்கங்கள் எடுத்துள்ளன. 

தொடர்ந்து வாசிக்க →
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்