செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

தமிழகத்தில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க 8 வார கால அவகாசம் ,சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க 8 வார கால அவகாசம் ,சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் கோரி SSTA சார்பாக சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது வழக்கு எண் WP-4420/2014 . வழக்கு கடந்த விசாரணையின் போது பதில் தாக்கல் செய்ய அரசுக்கு பல முறை அவகாசம் அளிக்கப்பட்டது. நீதிபதி அவர்கள் direction கொடுக்கலாமா என கேட்டபோது நீதிமன்றத்திற்குள்ளாகவே இறுதி தீர்வு வேண்டுமென SSTA சார்பாக கடந்த முறை (டிசம்பர் மாதம்)வேண்டப்பட்டது.
இந்நிலையில் 28.01.2015 அன்று வழக்கு- கோர்ட்டில் எண் -8 வரிசை எண்-39 ஆக விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில் மீண்டும் 4 வார கால அவகாசம் கோரப்பட்டது. நீதிபதி அவர்கள் அரசுக்கு பலமுறை கால அவகாசம் அளிக்கப்பட்டும் இதுவரை பதில் மனு தாக்கல் செய்யவில்லை என கூறி 8 வாரத்திற்குள் பரிசீலித்து பதில் அளிக்க வேண்டும் என் வழக்கை முடித்து வைத்தார்கள். பதில் சாதகமாக இருந்தால் தமிழகத்தில் பணிபுரியும் அனைவருக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் கிடைக்கும் 
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்