செவ்வாய், 17 மார்ச், 2015

மார்ச் 25-ல் தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று சட்டப் பேரவை செயலாளர் ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், '' 2015-2016-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை, 2015-2016-ஆம் ஆண்டிற்கான முன்பண மானியக் கோரிக்கைகள் மற்றும் , 2014-2015-ஆம் ஆண்டிற்கான இறுதித் துணை நிதிநிலை அறிக்கை ஆகியவை இந்த பட்ஜெட் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளன. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 181(1)-ன்கீழ், 2015-2016-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையினை 2015-ஆம் ஆண்டு மார்ச் 25-ஆம் நாள் புதன்கிழமை அன்று தாக்கல் ஆகும். 2015-2016-ஆம் ஆண்டிற்கான முன்பண மானியக் கோரிக்கைகள் 2015-ஆம் ஆண்டு மார்ச் 28-ஆம் நாள் சனிக்கிழமை அன்று முன்வைக்கப்படுகின்றன. 2015-2016-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை 2015-ஆம் ஆண்டு மார்ச் 25-ஆம் நாள் புதன்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு பேரவைக்கு கிடைக்கும்'' என்று ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்