வெள்ளி, 20 மார்ச், 2015

கோடை விடுமுறையில் பிளஸ் 2 வகுப்புகள்


பிளஸ் 1 வகுப்பில், தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, கோடை விடுமுறையில், பிளஸ் 2 பாடங்களைத் துவங்க, அரசு பள்ளிகள் முடிவு செய்துள்ளன.
இதுகுறித்து, கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:அரசுப் பள்ளிகளில், கோடை விடுமுறை முடிந்த பின், ஜூன் முதல் பாடங்களை துவங்குகிறோம். ஆனால், தனியார் பள்ளிகள், ஜனவரி முதல், பிளஸ் 1 மாணவர்களுக்கு, பிளஸ் 2 பாடங்களை நடத்துகின்றன. எனவே, இந்த முறை மே முதல் வாரத்தில் இருந்து, பிளஸ் 1 தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, பிளஸ் 2 பாடங்களை துவங்க திட்டமிட்டு உள்ளோம்.
பல பள்ளிகளில் ஆசிரியர்கள் பலர், கோடை விடுமுறையில் பாடம் எடுக்க, தாங்களே முன்வந்துள்ளனர். இதன்மூலம் அரசுப் பள்ளி மாணவர், அதிக கட்டணம் செலுத்தி கோடையில், தனியார் 'டியூஷன்' செல்ல வேண்டிய தேவை இல்லை.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்