சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று, சான்றிதழ் சரிபார்த்தல் பணிகள் முடிந்து தயாராக உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக பணி ஆணை வழங்கவேண்டும் என்று வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆசிரியர் கூட்டமைப்பைச் சேர்ந்த 10 பேர் சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக்கல்வித்துறை இயக்கக வளாகத்தில் 3வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மேலும் சிலர் உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் உண்ணாவிரதம் இருந்துவருபவர்களில் ஒருவரான நாகராஜன் என்பவர் திடீரென தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீசார் அவர் மீது தண்ணீர் ஊற்றி அவரை காப்பாற்றினர். உண்ணாவிரதம் இருந்த மேலும் ஒருவர் மயக்கமடைந்ததையடுத்து அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துமனையில் சேர்க்கப்பட்டார்.

0 comments:
கருத்துரையிடுக