செவ்வாய், 7 ஏப்ரல், 2015

ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணையுங்கள்: ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்


மத்திய அரசிடம் இருந்து ஓய்வூதியம் பெறும் முன்னாள் அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் இறப்புக்கு பின்னர் குடும்ப ஓய்வூதியம் பெறும் வாரிசுகள் தங்களது ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள். இவர்கள் அனைவரும் தங்களது ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்து, இது தொடர்பான தகவலை ஓய்வூதியம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என மத்திய அரசு இன்று அறிவுறுத்தியுள்ளது.
மேலும், இதுவரை ஆதார் எண்ணுக்கு பதிவு செய்து கொள்ளாத ஓய்வூதியதாரர்களும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களும், குடும்ப ஓய்வூதியம் பெறும் நபர்களும் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளும்படியும் கூறப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்களுக்கு இடையூறு இல்லாமல் பணம் சென்றடைவதை உறுதிபடுத்தவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஓய்வூதியம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரும் நவம்பர் மாதம் தாங்கள் உயிருடன் இருப்பதற்கான ‘ஜீவன் பிரமான்’ டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிப்பதற்குள் இந்த நடைமுறைகளை பூர்த்தி செய்வது கட்டாயம் ஆக்கப்படும் என தெரிகிறது.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்