புதன், 22 ஏப்ரல், 2015

அரசுப் பள்ளிகளுக்கு நாளை முதல் கோடை விடுமுறை

 அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளுக்கு வியாழக்கிழமை (ஏப். 23) முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. ஏப்ரல் 23 முதல் மே 31-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை ஆகும். விடுமுறைக்குப் பிறகு, ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

        பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் நிறைவடைந்துள்ள நிலையில், 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான மூன்றாம் பருவத் தேர்வுகள் இப்போது நடைபெற்று வருகின்றன. பெரும்பாலான மாவட்டங்களில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை தேர்வுகள் முடிவடைந்துவிட்டன. ஒரு சில மாவட்டங்களில் புதன்கிழமையோடு (ஏப். 22) தேர்வுகள் நிறைவடைவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

        தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை செயல்படும். இந்தப் பள்ளிகளுக்கு மே 1 முதல் 31-ஆம் தேதி வரை கோடை விடுமுறை வழங்கப்படுகிறது. அதேபோல், சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட தனியார் பள்ளிகளுக்கும் ஏப்ரல் கடைசியிலிருந்து கோடை விடுமுறை வழங்கப்படுகிறது.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்