புதன், 15 ஜூலை, 2015

ஊதியமும் கிடையாது, பணிமாறுதலும் கிடையாது!!! அரசாணை எண்-200 ,232 ஐ கண்டித்து SSTA விரைவில் போராட்டம்!!!

SSTA அரசாணை எண் -- 232. Dt. 10.07.2015 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 2015-16 வழிகாட்டி நெறிமுறைகள். வ.எண். 4ல் ஆசிரியர் ஒரே பள்ளியில் 3 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும் என உள்ளது அதாவது ஓர் ஆசிரியர் 
01.06.2012 க்கு முன் பணியேற்று இருந்தால் மட்டுமே இந்த ்-2015 பொதுமாறுதலில் கலந்து கொள்ள முடியும் இது ஆசிரியர்களிடையே அதிர்ப்தியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வித்துறையில் மாநில அளவில் பணி நியமனம், பணி மாறுதலும் நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் தங்கள் குடும்பங்களைப் விட்டுப்பிரிந்து வெகு தொலைவில் பணியாற்றி வருகின்றனர் . கடந்த ஆண்டுகளில் இந்த கட்டுப்பாடு  ஒரு கல்வியாண்டாக இருந்ததது. இந்த அரசாணையால் தகுதி தேர்வு மூலம் பணியேற்றவர்கள் ஒருவர் கூட கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்படுகிறது, இந்த உத்தரவினால் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள்  கலந்தாய்வு ஏக்கம் கனவாக போய்விடும் ,கடந்த வாரத்தில் 6 வது ஊதியக்குழு குறைகளை இனி கேட்கமாட்டோம் என்ற அரசாணை எண்-200   இந்த வாரத்தில் -232 அரசாணை ஆக மொத்தம் ஊதியமும் வழங்கமாட்டோம், பணிமாறுதலும் தரமாட்டோம் என்று தொடர்ந்து ஆசிரியர்களுக்கு விரோதமான இந்த இரு உத்தரவினை உடனடியாக மாற்றிட வேண்டும் . இதை SSTA வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும் இதை எதிர்த்து போராட்டம் விரைவில் நடைபெறும்.                                                                      உணர்வுக்கு குரல் கொடுப்போம்!!!    உரிமைக்கு உயிர் கொடுப்போம்!!! வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தால் நம் வாழ்வு ????             ஆசிரியர்களுக்கான SSTA...
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்