திங்கள், 27 ஜூலை, 2015

எஸ்சி- எஸ்டி பள்ளி ஆசிரியர்களுக்கு ஆன்லைனில் இடமாறுதல் கலந்தாய்வு!

ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு,  வரும் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "2015-16ஆம் கல்வி ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் நல மேல்நிலைப்பள்ளி / உயர்நிலைப்பள்ளி / நடுநிலைப்பள்ளி / ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள், கணினி ஆசிரியர், உடற்கல்வி  இயக்குநர் ஆகிய பதவிகளுக்கு 29.07.2015 அன்றும், 

பட்டதாரி ஆசிரியர் / தமிழாசிரியர் / இடைநிலை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர்  ஆகிய  பதவிகளுக்கு மாறுதல் 30.07.2015 அன்றும் காலை 10 மணி அளவில் அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பொது மாறுதல் கலந்தாய்வு ஆன்லைன் மூலம் மாறுதல் கோரி பதிவு செய்து விண்ணப்பத்தவர்கள் மட்டும்  ஆன்லைன் கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்