வியாழன், 20 ஆகஸ்ட், 2015

'ஸ்காலர்ஷிப்' பரீட்சை எழுத 31க்குள் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான, திறனறித் தேர்வுக்கு வரும், 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
பத்தாம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள், பிளஸ் 1, பிளஸ் 2 படிக்க, மாதந்தோறும், 1,250 ரூபாய் கல்வி உதவித்தொகையை, மத்திய அரசு வழங்குகிறது. இந்த உதவித்தொகையைப் பெற, மத்திய அரசின் தேசிய திறனறித் தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். முதற்கட்டமாக மாநில அளவில், நவ., 8ம் தேதி தேர்வு நடத்தப்படுகிறது. 
அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு, தேசிய அளவில் மே, 8ம் தேதி தேர்வு நடத்தப் படுகிறது. தமிழகத்தில், நவ., 8ம் தேதி நடக்கும் தேர்வினை எழுத விரும்புபவர்கள் வரும், 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் (பொறுப்பு) வசுந்தராதேவி அறிவித்துள்ளார். இதற்கான விண்ணப்பம், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 50 ரூபாய் தேர்வுக் கட்டணத்துடன், தலைமை ஆசிரியர்களிடம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்