புதன், 12 ஆகஸ்ட், 2015

ஊதியம் வழங்குவதில் குளறுபடி: போராட்டம் நடத்த ஆசிரியர்கள் முடிவு

அரக்கோணம் வட்டாரத்தில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் நீடிக்கும் குளறுபடியைக் கண்டித்து, போராட்டம் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.
ஆசிரியர்களுக்கு மாதத்தின் கடைசி வேலை நாளில் ஊதியம் வழங்கப்படும். அனைத்து தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கும் ஓரே தேதியில் வழங்கும் நிலை இருந்து வந்தது. இந்த நிலையில், கடந்த இரு மாதங்களாக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு தேதியிலும், அரசு நிதியுதவி பெறும்பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு ஒரு தேதியிலும் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த முறை அரக்கோணம் வட்டாரத்தில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு 6-ஆம் தேதி ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.
மணியக்கார தெருவில் உள்ள சிஎஸ்ஐ பெண்கள் தொடக்கப் பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியை, 8 ஆசிரியைகளுக்கு செவ்வாய்க்கிழமை வரை ஊதியம் வழங்கப்படவில்லை. இந்தக் குளறுபடியை பள்ளிக்கல்வித் துறை களைய வேண்டும். இதுபோன்ற குளறுபடிகளை நீக்கி ஒரே தேதியில் தொடர்ந்து ஊதியம் வழங்க வேண்டும். இந்த நிலை நீடித்தால் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்