சனி, 8 ஆகஸ்ட், 2015

TNPSC:குரூப் - 1 தேர்வுக்கு, விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட நான்கு பதவிகளில் 74 காலி இடங்களுக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய குரூப் - 1 தேர்வுக்கு, விண்ணப்பிக்க நாளை கடைசி நாள். இதுவரை, 1 லட்சத்து 61 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர்.தமிழகத்தில் துணை கலெக்டர் -19, டி.எஸ்.பி., - 26, வணிகவரி உதவி கமிஷனர் - 21, மாவட்டப் பதிவாளர் - 8 என, மொத்தம் 74 காலியிடங்கள் இருக்கின்றன, இந்த இடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நவம்பர், 8ம் தேதி தேர்வு நடத்துகிறது.
இதற்கு ஜூலை 10ம் தேதி முதல் 'ஆன் - லைன்' மூலம் விண்ணப்பிக்கும் பணி துவங்கியது. டி.என்.பி.எஸ்.சி., இணைய தளத்தில் விண்ணப்பம் பதிவு செய்யப்படுகிறது. நாளை நள்ளிரவு, 11:59 மணி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணத்தை வரும் 11ம் தேதி வரை வங்கி மூலம் செலுத்தலாம்.இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலசுப்ரமணியன் கூறும்போது, ''நேற்று மாலை, 6:00 மணி வரை 1 லட்சத்து 61 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர். இன்னும் இரண்டு நாட்கள் அவகாசம் இருந்தாலும், கடைசி நேர அவசரத்தை தவிர்க்க, தேர்வர்கள் முன்கூட்டியே பதிவுசெய்வது நல்லது,''என்றார்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்