சென்னை:அறநிலையத் துறை செயல் அதிகாரி பதவிக்கு, கூடுதல் தேர்வர்களின் பட்டியலை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:அறநிலைய ஆட்சித்துறை செயல் அலுவலர் நிலை- - 3 பதவிக்கான, 58 காலியிடங்களுக்கு, 2013ல் எழுத்துத் தேர்வு நடந்தது; 13 ஆயிரத்து, 660 பேர் பங்கேற்றனர். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஆகஸ்ட், 31ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது.இதில் அழைக்கப்பட்டு, வராதவர்களுக்கு பதிலாக, நேர்முகத்தேர்வுக்கு, 93 தேர்வர்களுக்கு, 18ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும். விவரங்களை, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் அறியலாம். இவ்வாறு அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:
கருத்துரையிடுக