கடந்த ஆண்டு ஜூலை 14-ம் தேதி, நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து, கோலாலம்பூருக்கு மலேசியன் ஏர்லைன்ஸின் எம்.எச்.17 போயிங் 777 ரக விமானம் சென்றுகொண்டிருந்தது. உக்ரைன் வான் எல்லையில் 33 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, விமானம் வெடித்து சிதறியது. இதில் விமானத்தில் இருந்த 298 பேரும் பலியாகினர்.
இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்து, நெதர்லாந்து நாட்டின் விசாரணைக்குழு நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் சொல்லப்பட்டிருக்கும் தகவல்கள் அதிர வைக்கின்றன.
விமானம் 33 ஆயிரம் அடி உயரத்தில் அதாவது 10.1 கிலோ மீட்டர் உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்திற்கு எதிர்புறமிருந்து 'பக்' ஏவுகணை ஏவப்பட்டுள்ளது. 350 சதுர கிலோ மீட்டர் பகுதிக்குள் இருந்து பக் ஏவுகணை ஏவப்பட்டுள்ளது. மின்னல் வேகத்தில் வந்த ஏவுகணை, விமானத்தின் காக்பிட் பகுதியின் இடது பக்கத்தில் மேற்பகுதியை முதலில் தாக்கியுள்ளது. இதில் உடனடியாக காக்பிட்டில் இருந்து விமானி, துணை விமானி, வழிகாட்டும் என்ஜீனியர் உள்ளிட்ட 3 பேரும் மரணமடைந்துள்ளனர்.
விமானம் 33 ஆயிரம் அடி உயரத்தில் அதாவது 10.1 கிலோ மீட்டர் உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்திற்கு எதிர்புறமிருந்து 'பக்' ஏவுகணை ஏவப்பட்டுள்ளது. 350 சதுர கிலோ மீட்டர் பகுதிக்குள் இருந்து பக் ஏவுகணை ஏவப்பட்டுள்ளது. மின்னல் வேகத்தில் வந்த ஏவுகணை, விமானத்தின் காக்பிட் பகுதியின் இடது பக்கத்தில் மேற்பகுதியை முதலில் தாக்கியுள்ளது. இதில் உடனடியாக காக்பிட்டில் இருந்து விமானி, துணை விமானி, வழிகாட்டும் என்ஜீனியர் உள்ளிட்ட 3 பேரும் மரணமடைந்துள்ளனர்.
அடுத்த 90 வினாடிகளில் விமானம் வானத்திலேயே 2 துண்டாக உடைந்து சிதறியுள்ளது. பயணிகள் அனைவரும் ஏவுகணை தாக்கப்பட்டதால் மரணமடையவில்லை. 33 ஆயிரம் அடி உயரத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மயக்கநிலைக்கு சென்றுள்ளனர். பின்னர் விமானம் வெடித்து சிதறியபோது இறந்திருக்கின்றனர். விமானத்தின் முகப்பு பகுதியை ஏவுகணை தாக்கியதற்கான அடையாளங்கள் 'காக்பிட்' பகுதியை ஆராய்ந்ததில் உறுதி செய்யப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உக்ரைனின் கிழக்கு பகுதியில், ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களால் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த அறிக்கையில் பக் ஏவுகணையை ஏவியது யார் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. விமானத்தின் உடைந்த பாகங்கள், உக்ரைனில் இருந்து ரயில் மூலம் நெதர்லாந்தின் கிளிஸ் ரின்ஜென் விமானப்படைத் தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. விமானம் தகர்க்கப்பட்டு 15 மாதங்களுக்கு பிறகு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
உக்ரைனின் கிழக்கு பகுதியில், ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களால் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த அறிக்கையில் பக் ஏவுகணையை ஏவியது யார் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. விமானத்தின் உடைந்த பாகங்கள், உக்ரைனில் இருந்து ரயில் மூலம் நெதர்லாந்தின் கிளிஸ் ரின்ஜென் விமானப்படைத் தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. விமானம் தகர்க்கப்பட்டு 15 மாதங்களுக்கு பிறகு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்த குற்றச்சாட்டை, பக் ஏவுகணையை தயாரிக்கும் மாஸ்கோவை சேர்ந்த அல்மாஸ்-அண்டே நிறுவனமான மறுத்துள்ளது.உக்ரைன் ராணுவம் 9எம்38 ரக ராக்கெட்டை வீசி மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளது. அந்த உண்மையை திட்டமிட்டு மறைப்பதாக அல்மாஸ்-அண்டே நிறுவனம் தெரிவித் துள்ளது.

0 comments:
கருத்துரையிடுக