சனி, 17 அக்டோபர், 2015

வட்டாட்சியர் அலுவலக இணைய வழி சேவை மையங்களில் தமிழக அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் வசதி

திருவண்ணாமலை மாவட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் இயங்கும் இணைய வழி சேவை மையங்களில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் வசதி தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் அரசின் இணைய வழி சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. இந்த மையங்களில் வருவாய்த் துறை, சமூக நலத் துறைகளின் பல்வேறு சேவைகள் இணைய வழி மூலம் வழங்கப்படுகிறது. மேலும், பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெறும் வசதி, ஆதார் அட்டை பெறும் போது தெரிவிக்கப்பட்ட செல்லிடப்பேசி எண்ணை மாற்றும் வசதி, கடவுச் சீட்டுக்கு (பாஸ்போர்ட்) விண்ணப்பிக்கும் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், புதிதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் வசதி, விண்ணப்பத்தின் நகல்களைப் பெறும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நிரந்தரப் பதிவுக்கு ரூ. 50: அதன்படி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளுக்கு நிரந்தரமாகப் பதிவு செய்ய ரூ. 50, தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ரூ. 30, விண்ணப்பங்களில் மாறுதல் செய்ய ரூ. 5,மாறுதல் செய்யப்பட்ட விண்ணப்பத்தின் நகல்களைப் பெற ரூ. 20 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்குச் செலுத்த வேண்டிய நிரந்தரப் பதிவுக் கட்டணத்தை செலுத்தும் வசதியும் இந்த மையத்திலேயே ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சேவைகளை திருவண்ணாமலை மாவட்ட இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்