
திருவள்ளூர் அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பள்ளி ஆசிரியை ஒருவரை அரிவாளால் வெட்டிய 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் அழிஞ்சிவாக்கம் எனும் கிராமத்தில் பெற்றோருடன் வசித்துவருபவர் பூமணி. தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வரும் இவர், இன்று அதிகாலை வீட்டின் கதவு தட்டப்பட்டதை அடுத்து, கதவை திறந்துள்ளார்.
அப்போது வாசலில் நின்றிருந்த 5 பேர் கொண்ட கும்பல் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பூமணியை வெட்டி விட்டு தப்பிச்சென்றுள்ளனர். இதனையடுத்து, திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பூமணி, தீவிரசிகிச்சை பிரிவில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
பக்கத்துவீட்டினருடன் ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாகவும், தாக்குதலுக்கு அவர்களே காரணம் என்றும் பூமணி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வெங்கல் காவல் துறையினர் வழக்கு பதிவுசெய்து தப்பிச்சென்ற கும்பலை தேடிவருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் அழிஞ்சிவாக்கம் எனும் கிராமத்தில் பெற்றோருடன் வசித்துவருபவர் பூமணி. தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வரும் இவர், இன்று அதிகாலை வீட்டின் கதவு தட்டப்பட்டதை அடுத்து, கதவை திறந்துள்ளார்.
அப்போது வாசலில் நின்றிருந்த 5 பேர் கொண்ட கும்பல் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பூமணியை வெட்டி விட்டு தப்பிச்சென்றுள்ளனர். இதனையடுத்து, திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பூமணி, தீவிரசிகிச்சை பிரிவில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
பக்கத்துவீட்டினருடன் ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாகவும், தாக்குதலுக்கு அவர்களே காரணம் என்றும் பூமணி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வெங்கல் காவல் துறையினர் வழக்கு பதிவுசெய்து தப்பிச்சென்ற கும்பலை தேடிவருகின்றனர்.

0 comments:
கருத்துரையிடுக