885 வட்டார வளமைய ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணிஅமர்த்தாமல் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர்களை நியமிக்கத்தடை
கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்செய்யப்பட்டுள்ளது.
அனைத்து வட்டார வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்றச்சங்க பொதுச் செயலர் எம். ராஜ்குமார் இந்த மனுவைத் தாக்கல்செய்துள்ளார்.மனு விவரம்: ஒவ்வோர் ஆண்டும் 500 வட்டார வளமையப் பயிற்றுநர்கள் பணி மூப்பு அடிப்படையில் அரசுப் பள்ளிகளில்பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்பட வேண்டும் என 2006-இல்அரசு உத்தரவிட்டது.
2012-2013 ஆம் ஆண்டில் 115 பயிற்றுநர்கள் மட்டுமேபட்டதாரிஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். மேலும், 385 வட்டாரகண்காணிப்பாளர்கள் அரசுப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரிஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். அரசாணைப்படி வட்டார வளமைய பயிற்றுநர்கள்தான் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்படவேண்டும். 385 வட்டார கண்காணிப்பாளர்களை முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களாக நியமித்தது தவறு. 2013-2014 ஆம் ஆண்டு500 பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாகநியமிக்கவில்லை.எனவே, மொத்தம் 885 வட்டார வள மையஆசிரியர் பயிற்றுநர்களை அரசுப் பள்ளிகளில் பட்டதாரிஆசிரியர்களாக நியமிக்க உத்தரவிட வேண்டும். இந்நிலையில்,ஆசிரியர் தேர்வு வாரியம் பட்டதாரி ஆசிரியர்களை நேரடியாகநியமிக்க 14.7.14 இல் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதைரத்துசெய்ய வேண்டும். 885 பயிற்றுநர்களை பட்டதாரிஆசிரியர்களாக நியமித்த பின்பு உள்ள காலிப் பணியிடங்களில்நேரடியாக பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க உத்தரவிட வேண்டும்என குறிப்பிட்டிருந்தார். இம் மனுவை விசாரித்த நீதிபதிகே.கே.சசிதரன், மனுவுக்கு பள்ளிக்கல்வித் துறை முதன்மைச்செயலர்,இயக்குநர், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் ஆகியோர்பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

0 comments:
கருத்துரையிடுக