ஒண்ணுக்கு வந்தா அடக்காதீங்க!-- ஒண்ணுக்கு வந்தா அடக்காதீங்க!
–
சிறுநீரக
தொற்றுக
ளும்
தீர்வுகளும்ஷாப்பிங்,
சினிமா,
கோயில்,
குடும்பவிழாக்கள்.
என்று மணிக்கணக்கில்
நீளும்
நிகழ்வுக
ளுக்காக
செல்லும்
போது,
சிறுநீர் கழிப்பதைத் தவிர்ப்பது, பெண்க ளில்
பலருக்கும் வழக்கமாகவே இருக்கிறது.
‘பாத்ரூம் சரியில்லை …’, ‘நேரமே இல்லை…’,
‘பாத்ரூமே இல்லை… ரோட்டுலயா போக முடியும்?’
என்பதுபோன்ற கேள்வி களைத் தங்கள்
தரப்பு நியாயங்க ளாக எழுப்பி,
தங்களை சமாதான
ப்படுத்திக்கொள்ளவும் இவர்கள்
தவறு வதில்லை. இவர்களில் நீங் களும்
ஒருவரா? “இத்தகைய போக்கு, மிகப்பெரிய
ஆபத்தை நோக்கி உங்களைஇழுத்துச்
சென்றுவிடும்” என்று உங்க
ளை நோக்கி எச்சரிக்கை மணி அடிக்கி றார்.
சென்னை, ராமச்சந்திரா மருத்துவ
மனையின்
சிறுநீரகத்துறை தலை மை மருத்துவப்பேராசிரியர் Dr.
பி.சௌந்தர ராஜன். ”சிறுநீரக
நோய்த்தொற்று என்பது ஆண்களைவிட
பெண்களுக்கு 20 சதவிகிதம்
வாய்ப்பு அதிகம். இதற்கு முக்கியக்
காரணம், வெளியிடங்களு க்குச்
செல்லும்
போது சிறுநீரை வெளியேற்றாமல் அட
க்கிக்கொள்ளும் பழக்கம்தான்!”
என்று சொல்லும் டாக்டர், சிறுநீர்
பிரச்சனை ஏற்படுவதற்கான காரண ங்கள்,
முக்கியமாகப் பாதிக்கப்படு பவர்கள்,
தவிர்ப்பதற்கான வழிகள், தினமும் குடிக்க
வேண்டிய நீரின் அளவு, சிறுநீரகத்
தொற்று நீக்கும் உணவு வகைகள்,
இன்னும் பல விழிப்பு உணர்வுத் தகவல்கள்
எனத் தொடர்ந்தார்.
ஆரோக்கியத்தின் முதல் படி… சீரான சிறுநீர்
வெளி யேற்றம்!
”உடல் ஆரோக்கியத்துக்கான முக்கி யமான
இயக்கங் களில் ஒன்று, இயல்பாக சிறுநீர்
கழிப்பது. உடம்பு க்குத் தேவையான நீர்
எடுத்துக்கொ ள்ளப்பட்ட பிறகு,
உடற்கழிவுகளுட ன் வெளியேறும் மீதமுள்ள
நீர்தான் சிறு நீர். தினமும் தேவையான
அளவு நீர் குடிப்பதும், சிறு நீர் கழிப்பதற் கான
உணர்வு ஏற்பட்டவுடன் தக்கவை க்காமல்
வெளியேற்றுவதும் ஆரோக்கி யத்தின் முதல்
படி. வெளியேற்றாமல் தேக்கும்போது,
சிறுநீர்ப்பையின் கொள் ளளவையும் மீறிய
சுமையை அது தாங் க வேண்டி வரும்.
இதையே தொடர்ந்து செய்யும்போது,
சிறுநீரகத் தொற்று ஏற்பட்டு, சிறுநீரகச்
செயலிழப்பு வரை பிரச்னைகள் வரிசை கட்டும்.
என வே, சிறுநீர் வந்தால் உடனடியாகக்
கழிக்க வேண்டி யது அவசியம்.
எவ்வளவு தண்ணீர் குடிக்கவேண்டும்?
கோடை காலத்தில் ஒரு நாளைக்கு 3 லிட்டர்
தண்ணீ ரும், மற்ற பருவநி லைக் காலங்களில் 2
லிட்டர் தண்ணீ ரும் போதுமானது. குடிநீரைத் தவிர,
பால், பழச்சாறு, காய்கறி போன்ற வ ற்றில்
இருந்தும் உடலுக்குத்தேவையான நீர்கிடைத்து விடும்.
அதேசமயம், தேவைக்கு அதிகமாகத் தண்ணீர்
குடிப்பதும் பிரச்னையே! ஏ.சி. அறையில்
இருப்பவர்கள், ஏ. சி.வாகனங்களில்
தொடர்ந்து பயணிப்பவர்களுக்கு தாகம்
எடுக்காமல் இருக்கலாம். என்றாலும்,
ஒரு நாளைக்கு குறைந்தது ஒன்று முதல் 2 லிட்டர்
வரை தண்ணீர் குடிக்க வேண் டும். தாகம்
எடுப்பதன் காரணமாக இந்த அளவை விட
கூடு தலாகத் தண்ணீர் குடிப்பதில் தவறில்லை.
ஆனால், தண் ணீர்
குடிப்பது நல்லது என்று பிறர்
சொல்வதற்காக இஷ்ட ம்போல
குடிப்பதுநல்லதல்ல. இப்படிக் குடிப்பது,
சிறுநீரகத் துக்கு கூடுதல்
பளு தருவதா கத்தான் அமையும். கூடவே,
இதயம் பழுதானவர்கள் மருத்துவர்
பரிந்துரைத்ததற்கும் அதிகமாகக் கண்டிப் பாக
தண்ணீர்குடிக்கக்கூடாது. இதன்
காரணமாக இ தயமானது ரத்தத்தை சரிவர
‘பம்ப்’ செய்ய முடியாமல் போ கும். அதேபோல,
சிறுநீரகம் பாதிக்க ப்பட்டவர்களும், கல்லீரல்
நோயாளி களும் அதிகமாகத் தண்ணீர்
குடிக்கக் கூடாது. சிறுநீரகத்தில் கல் உள்ளவர்
கள் அதிகமாகத் தண்ணீர் குடிக்கும்
போது அது கற்களைக் கரைத்து வெளியேற்றும்
என்ப தால், அவர்களை மட்டும் மருத்துவர்கள்
அதிக நீர் அருந்தச் சொல்வோம்.
சிறுநீர்த் தொற்று ஏற்பட
காரணங்கள்!
தேவையான அளவு தண்ணீர் குடிக் காமல்
இருப்பது, சிறுநீரை அடக்கு வது, சுகாதாரமற்ற
கழிப்பறையைப் பயன்படுத்துவது, மரபு, சுய
சுத்தமி ன்மை, தாம்பத்யம் … என்று பல
காரணங்களால் சிறு நீர்த்
தொற்று ஏற் படக்கூடும்.
சாதாரணமாக
‘யூரினரி இன்ஃபெக்ஷன்’ என்று இதைச்
சொல்லி, எளிதாகக் கட ப்பதுதான்
வழக் கமாக இருக்கிறது. இதைக்
கவனிக்காமல் விட்டால்
அடுத்தடுத்து வரிசை கட்டும் பிரச்ச னைகளின்
பட்டியல் நீளம். நீர்க்கடு ப்பாக ஆரம்பித்து,
அடிக்கடி சிறுநீர் வெ ளியேற்றும் உணர்வு,
சொட்டு சொட்டாக சிறுநீர்
வெளி யேறுவது, சிறுநீர்
வெளியேறும்போது தாங்க முடியா த
வலி மற்றும் எரிச்சல், முதுகு வலி, சிறுநீரகத்தில்
நோய்த் தொற்று ஏற்படுத்தும் கிருமி கள்
உற்பத்தி யாவது வரை கலங்கவைக்கும்.
கர்ப்பிணிப் பெண்கள்,
நீரி ழிவு நோயாளிகள், முதியவ ர்களுக்கு சிறுநீர்த்
தொற்று ஏற்பட்டால் அது சீரியஸ்
பிரச்னை என்பதை உணர வேண்டும்.
கர்ப்பகாலத்தில்தாய் சிறுநீரகப்
பிரச்சனை யால் பாதிக்கப்பட்டால், குழந்
தைக்கும் அந்த பாதிப்பு ஏற்பட லாம்…
ஜாக்கிரதை!
சிறுவர்க ளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும்

0 comments:
கருத்துரையிடுக