மத்திய அரசின் சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட மாணவர்களுக்கான, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை துவங்குகிறது. இதில், 24 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர்.
நாடு முழுவதும், சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட பள்ளிகளில் படிக்கும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, இந்த ஆண்டு, நாளை ஒரே நாளில் துவங்குகிறது. 10ம் வகுப்புக்கு, மார்ச் 26ம் தேதியும்; பிளஸ் 2வுக்கு, ஏப்ரல் 20ம் தேதியும் தேர்வுகள் முடிகின்றன. இந்த ஆண்டு, 10ம் வகுப்பில், 8,17,941 மாணவர்; 5,55,912 மாணவியர் என மொத்தம், 13,73,853 பேர் தேர்வு எழுதுகின்றனர். பிளஸ் 2வில், 6,07,383 மாணவர்; 4,32,985 மாணவியர் என மொத்தம், 10,40,368 பேர் தேர்வில் பங்கேற்கின்றனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில், 1 சதவீத மாணவர்கள் அதிகமாக தேர்வெழுதுகின்றனர். தேர்வுக்கான ஏற்பாடுகளை, அந்தந்த மண்டல அதிகாரிகள் மேற்கொண்டு உள்ளனர்.

0 comments:
கருத்துரையிடுக