செவ்வாய், 3 மார்ச், 2015

9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு முதன்மைச் செயலாளர் அந்தஸ்து: தமிழக அரசு உத்தரவு!!

தமிழகத்தில் ஒன்பது ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு முதன்மைச் செயலாளர் அந்தஸ்து வழங்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. செயலாளர் நிலையில் உள்ள அவர்களுக்கு முதன்மைச் செயலாளர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் வெளியிட்ட செய்தியில்,
தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் டி.கே.ராமச்சந்திரன், உணவுப் பொருள் வழங்கல்-நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் எஸ்.கோபாலகிருஷ்ணன், மத்திய அரசின் கப்பல் போக்குவரத்துத் துறை இணைச் செயலாளர் என்.முருகானந்தம், தமிழக ஆளுநரின் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, மத்திய அரசுப் பணியில் இருந்து இப்போது விடுப்பிலுள்ள சுப்ரியா சாகு, விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் ஷம்பு கல்லோலிகர், ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நலத் துறை செயலாளர் கண்ணகி பாக்கியநாதன், சமூக நலன்-சத்துணவு திட்டத் துறை செயலாளர் பி.எம்.பஷீர் அஹமது ஆகிய 9 அதிகாரிகள் முதன்மைச் செயலாளர் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்