சனி, 14 மார்ச், 2015

அரசு பள்ளி ஆசிரியர்களை குறைவாக மதிப்பிட முடியாது : முதல்வர்


அரசு பள்ளிகளில் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை வீதம் குறைந்து வருகிறது. அரசின் ஆரம்ப பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் சில வகுப்புகளில் மாணவர்களே இல்லை. சில வகுப்புகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அரசு என்ன திட்டம் வைத்துள்ளது? என்று கேள்வி எழுப்பினார்.

இதை மறுத்த முதல்வர் ரங்கசாமி, அனைத்து அரசு பள்ளிகளும் தரமாக உள்ளது. தனியார் பள்ளிகளுக்கு இணையான ஆசிரியர்களை அரசு பள்ளிகளுக்கு தேர்வு செய்துள்ளோம். இதனால் அரசு பள்ளி ஆசிரியர்களை குறைவாக மதிப்பிட முடியாது.

புதுவை மக்களிடம் வாங்கும் சக்தி அதிகமாக உள்ளது. இதனால் அதிக கட்டணம் செலுத்தி தனியார் பள்ளிகளில் குழந்தைகளை பெற்றோர் சேர்க்கின்றனர். அதேவேளையில் அரசு பள்ளிகளில் 10, பிளஸ்–2 வகுப்புகளில் தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைககளைச் சேர்க்க பெற்றோர்கள் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்