சனி, 16 மே, 2015

பி.இ.: 1.70 லட்சம்; எம்.பி.பி.எஸ்.: 27,125 விண்ணப்பங்கள் விநியோகம்


பி.இ. படிப்பில் மாணவர்களைச் சேர்க்க இதுவரை 1.70 லட்சம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

2015-16 கல்வியாண்டில் பி.இ. படிப்பில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான விண்ணப்ப விநியோகம் மே 6-ஆம் தேதி தொடங்கியது. மே 27-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மையங்களில் மட்டும் மே 29-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.

தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 60 மையங்களில் வெள்ளிக்கிழமை (மே 15) வரை 1.70 லட்சம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

எம்.பி.பி.எஸ்.- பி.டி.எஸ்.: தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.- பி.டி.எஸ். படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க 19 அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு பல் மருத்துவக் கல்லூரியில் கடந்த மே 11-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஐந்து நாள்களில் மொத்தம் 27,125 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

வரும் 28-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு வரும் 29-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேர வேண்டும்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்