ஞாயிறு, 12 ஜூலை, 2015

கரூர் மாவட்டத்தில் ஜூலை 15 முதல் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம்

கரூர் மாவட்டத்தில் வரும் ஜூலை 15 முதல் 24 வரை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது என்றார் ஆட்சியர் ச. ஜெயந்தி.
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம் நடத்துவது தொடர்பாக அரசின் உத்தரவின் படி, கரூர் மாவட்டத்தில் வரும் ஜூலை 15-ல் புனித தெரசா தொடக்கப்பள்ளியிலும், 16 ஆம் தேதி, தாந்தோணி ஊராட்சியில் உள்ள கவுண்டம்பாளையம் அரசுப்பள்ளியிலும், 17-ல் அரவக்குறிச்சி அரசு ஆண்கள்
மேல்நிலைப்பள்ளியிலும், 20 ஆம் தேதி க. பரமத்தி அரசுப்பள்ளியிலும், 21-ல் லாலாப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 22-ஆம் தேதி தரகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 23-ல் குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், கடைசி நாளான 24 ஆம் தேதி தோகைமலை அரசு மேல்நிலைப்பள்ளியிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கானசிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளன.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்