செவ்வாய், 21 ஜூலை, 2015

ராணுவத்தில் சேர 'ஆன் - லைனில்' விண்ணப்பம்

நாட்டிலேயே முதன்முறையாக, தமிழகத்தில் ராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு முறையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதன்படி, ராணுவத்தில் சேர விரும்புவோர், இனி, 'ஆன் - லைன்' மூலம் விண்ணப்பிக்கலாம். சென்னை பிராந்தியத்தில், இந்த புதிய முறை செப்டம்பரில் அமலாகிறது,'' என, ராணுவ ஆட்சேர்ப்பு தலைமை அதிகாரி (சென்னை பிராந்தியம்), அவினாஷ் டி.பித்ரே கூறினார்.
ஆட்சேர்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியான உடன், ராணுவ ஆட்தேர்வு மையத்தின், புதிய இணையதளமான,joinindianarmy.nic.in - ல் காணப்படும் விண்ணப்பத்தை, 'ஆன் - லைனில்' பூர்த்தி செய்து அனுப்பினால் போதும். ராணுவ வீரர் பணியில் சேர விரும்புவோருக்கு, தேவையான தகுதிகள்; 'ஆன் - லைன்' மனுவோடு இணைத்து அனுப்ப வேண்டிய சான்றிதழ்கள் விவரம், காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை உட்பட, பல தகவல்களை இளைஞர்கள் அறிந்து கொள்ள, 'voober' என்ற புதிய மொபைல் போன், 'அப்ளிகேஷனை - ஆப்'பை, ராணுவம் முதன்முறையாக அறிமுகப்படுத்தி உள்ளது. 'ஆண்ட்ராய்டு' மொபைல் போன் உபயோகிப்பாளர், அதை, 'கூகுள் பிளே ஸ்டோரில்' பதிவிறக்கம் செய்யலாம்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்