புதன், 19 ஆகஸ்ட், 2015

காஞ்சிபுரம்,மாவட்ட கருவூலத்தில் உதவியாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

மாவட்ட கருவூல அலகில், காலியாக உள்ள 4 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கருவூல துறை இணை இயக்குனர் காத்தவராயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு கருவூலக் கணக்கு துறையின், காஞ்சிபுரம் மாவட்ட கருவூல அலகில், காலியாக உள்ள 4 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு, இன சுழற்சி மற்றும் தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மிகவும் பிற்படுத்தப்பட்டோரில் விதவை, பிற்படுத்தப்பட்டோரில் விதவை, பொது ஆகிய பிரிவினருக்கு, 32 வயதும், பொதுப் பிரிவினருக்கு 30 வயதும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பதாரர்கள், ஜூலை 1-ஆம் தேதியன்று, நிர்ணயம் செய்யப்பட்ட வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். இதற்கான கல்வித் தகுதி, 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்த பணிக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள், இணை இயக்குனர், மாவட்ட கருவூலம், ஆட்சியர் அலுவலகம், காஞ்சிபுரம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்