சனி, 12 செப்டம்பர், 2015

பி.எஸ்சி., - நர்சிங், பி.பார்ம்., 14ம் தேதி 2ம் கட்ட கவுன்சிலிங்

சென்னை:பி.எஸ்சி., - நர்சிங், பி.பார்ம்., உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான, இரண்டாம் கட்ட கவுன்சிலிங், 14ம் தேதி துவங்குகிறது.தமிழகத்தில், பி.எஸ்சி., - நர்சிங், பி.பார்ம்., உள்ளிட்ட, மருத்துவம் சார்ந்த, ஒன்பது வகையான பட்டப் படிப்புகள் உள்ளன. அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இந்த படிப்புகளில், 7,174 பேர் சேரலாம்.இதற்கான முதற்கட்ட கவுன்சிலிங்கில், அரசு கல்லுாரிகளில், 555 மற்றும் சுயநிதிக் கல்லுாரிகளில், 5,072 இடங்களில் மாணவர்கள் சேர்ந்து விட்டனர்.சுயநிதிக் கல்லுாரிகளில் மீதியுள்ள, 2,014 இடங்களை நிரப்புவதற்கான, இரண்டாம் கட்ட கவுன்சிலிங், வரும் 14ம் தேதி முதல், 19ம் தேதி வரை, சென்னை ஓமந்துாரார் மருத்துவக் கல்லுாரியில் நடக்கிறது.'மேலும் விவரங்களை, www.tn.gov.in மற்றும் www.tnhealth.org ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம்' என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்