செவ்வாய், 1 செப்டம்பர், 2015

மீண்டுமொரு விடுதலைப் போர்

ஒருமுறை வீழ்கிறேன் நான்
தலைமுறை தழைக்கட்டும் - எனத்
தங்கள் உதிரம் ஊற்றி
ஈன்று எடுத்திட்ட உரிமைகளை
புதைகுழி தன்னிலே புதைத்திட்ட
அரசியல் சூழ்ச்சியாளர்களிடம் இருந்து
மீட்டுக்கொணர பல்வேறுகட்ட
போராட்டக் களங்களுக்குப்
படையெடுத்திட்ட எனதருமை
உழைப்பின் வேங்கைகளே
ஆசிரிய அரிமாக்களே
தலை வணங்குகிறேன்
நின் கர்ச்சனைகளுக்காய்
போராட்டம் எனக்கெதுக்கு
வீட்டோரம் வேலையிருக்க,
அடுத்தவன் அடிக்கட்டும்
அடுக்கலையில் நானிருப்பேன்
சிதறிடும் பழங்களில்
சிலயென் நிலம்விழும்
பொறுக்கிநான் புசித்திடுவேன் - எனும்
ஈனக்கயவனே, நீயினிமேல்
இயக்க நடவடிக்கைகளின்
கண்ணியத்தை எண்ணிடாது,
ஒதுங்கிநீ போவாயானால்
ஒதுக்கப்பட்டு விடப்படுவாய்,
இயக்கப் பாகுபாடின்றி
தரணியினுள் நீயிருந்தும்
தனித்துநீ விடப்படுவாய்,
இளவல்கள் யாருமன்றி
இறையாண்மையைக் காத்து
தாரைவார்க்கப்படும் தாய்நாட்டை
துரோகிகளிடமிருந்து மீட்டெடுக்க. . .
பொதுத்துறை நிறுவனங்களை
அந்நியப் புதைகுழியில்
புதையவிடாது தடுக்க. . .
சேவையை வணிகமாக்கி
காசாக்கும் கயவர்களிடமிருந்து
பொதுவிநியோகத்தைப் பரவலாக்கிட. . .
உழைப்பிற்கேற்ற ஊதியத்தை
உதிரத்தை வியர்வையாக்கும்
உழைப்போருக்கு உரியதாக்கிட. . .
ஆயுள்முழுக்க அன்னைநாட்டை
உழைப்பால் உயர்த்தியோரை
ஓய்வுக்காலத்தில் காத்திட. . .
புயலென புறப்பட்டு
இடியென முழங்கி
அடிக்கிற அடியில்
அம்மியும் நகர்ந்து
ஆணவங்கள் தகர்ந்து
உரிமைகளை உரியதாக்கிட
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்