ஞாயிறு, 4 அக்டோபர், 2015

அரசுக் கல்லூரிகளில் கலந்தாய்வு இல்லாமல் மறைமுக இடமாறுதல்?

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தாமலே நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்கப்பட்டுள்ளதாகப் பேராசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
அரசுக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் குறைந்தபட்சம் ஓராண்டு பணி நிறைவு பெற்றவுடன், பணி மூப்பு அடிப்படையில் அவர்கள் விரும்பிய இடங்களுக்கு இடமாறுதல் வழங்கப்படும்.
இந்த இடமாறுதலில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் ஜூன், ஜூலை மாதங்களில் பொதுக் கலந்தாய்வு மூலம் மட்டுமே இந்த இடமாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், நிகழாண்டுக்கான (2015) இடமாறுதல் கலந்தாய்வு இதுவரை நடத்தப்படவே இல்லை. இதனால், கலந்தாய்வை நடத்தக் கோரி அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் தொடர் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், புதிதாக நியமனம் பெற்றவர்களில் சிலருக்கு, அவர்கள் விரும்பிய இடங்களுக்கு மறைமுகமாக இடமாறுதல் அளிக்கப்பட்டிருப்பது பேராசிரியர்களுடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகத் தலைவர் வெங்கடாசலம், கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலக அதிகாரிகள் ஆகியோர் கூறியதாவது:
அண்மையில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 1,006 உதவிப் பேராசிரியர்கள் அரசாணையின் அடிப்படையில் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் அந்தந்த கல்லூரிகளில் பணியில் சேர்ந்துவிட்டனர்.
இந்த நிலையில், அவர்களில் 200 பேருக்கு அவர்கள் விரும்பிய கல்லூரிகளுக்கு இடமாறுதல் அளிக்கப்பட்டுள்ளது. அதுவும், முந்தைய அரசாணையை ரத்து செய்து, புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால், கடந்த இரண்டு மாதங்களாக அவர்கள் பணிபுரிந்து வந்த கல்லூரியில் முறையான விடுவிப்பு எதையும் பெறாமலே, புதிய கல்லூரியில் கடந்த இரண்டு நாள்களாக பணியில் சேர்ந்து வருகின்றனர்.
இது பணி மூப்புடன் பல மாதங்களாகக் காத்திருக்கும் அரசுக் கல்லூரி ஆசிரியர்களிடைய பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுபோன்ற நடைமுறைகளைத் தடுத்து, இடமாறுதலில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய தமிழக அரசு ஆவன செய்யவேண்டும் என்றனர்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்