கோவை: இ.எஸ்.ஐ., மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், முதலாமாண்டு வகுப்பு நேற்று துவங்கியது. கோவை, வரதராஜபுரத்தில், கடந்த பிப்ரவரி மாதம் இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனை துவங்கப்பட்டது. கல்லுாரி யில், மொத்தமுள்ள, 100 இடங்களில், 65 இடங்கள், மாநில அரசுக்கு ஒதுக்கப்பட்டன. மீதமுள்ள இடங்களை நிரப்ப, 'நீட்' தேர்வு நடத்தப்பட்டது.
இதில் தேர்வு செய்யப்பட்ட,முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்பு துவக்க விழா, நேற்று நடந்தது. சென்னை, மருத்துவக் கல்வி இயக்குனரக துணை இயக்குனர் சைபுர் நிஷா, 'டீன்' அசோகன் உட்பட பலர்பங்கேற்றனர்.

0 comments:
கருத்துரையிடுக