T

காஞ்சீபுரம்,
தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் வெ.முருகதாஸ் தலைமையில் பகுதி நேர ஆசிரியர்கள் காஞ்சீபுரம் காவலான் கேட் அருகே கவன ஈர்ப்பு முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
படித்து வேலை இல்லாமல் இருந்த பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களை பகுதி நேர ஆசிரியர்களாக பணி நியமனம் செய்த தமிழக முதல்–அமைச்சருக்கு நன்றி தெரிவித்தும், பகுதிநேர ஆசிரியர்கள் அனைவரையும் பள்ளிக்கல்வித்துறைக்கு மாற்றி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் அவர்கள் கோஷமிட்டனர். இதில் மாவட்ட செயலாளர் சீனுவாசன், மாநில துணைத்தலைவர் பாஸ்கரன், ஜெய்சங்கர், தினகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு தமிழக பகுதி நேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து 100–க்கும் மேற்பட்ட அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.
பின்னர் இது தொடர்பான புகார் மனுவை மாவட்ட கலெக்டர் கொ.வீரராகவராவிடம் வழங்கினார்கள். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் வெ.முருகதாஸ் தலைமையில் பகுதி நேர ஆசிரியர்கள் காஞ்சீபுரம் காவலான் கேட் அருகே கவன ஈர்ப்பு முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
படித்து வேலை இல்லாமல் இருந்த பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களை பகுதி நேர ஆசிரியர்களாக பணி நியமனம் செய்த தமிழக முதல்–அமைச்சருக்கு நன்றி தெரிவித்தும், பகுதிநேர ஆசிரியர்கள் அனைவரையும் பள்ளிக்கல்வித்துறைக்கு மாற்றி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் அவர்கள் கோஷமிட்டனர். இதில் மாவட்ட செயலாளர் சீனுவாசன், மாநில துணைத்தலைவர் பாஸ்கரன், ஜெய்சங்கர், தினகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு தமிழக பகுதி நேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து 100–க்கும் மேற்பட்ட அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.
பின்னர் இது தொடர்பான புகார் மனுவை மாவட்ட கலெக்டர் கொ.வீரராகவராவிடம் வழங்கினார்கள். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

0 comments:
கருத்துரையிடுக