வெள்ளி, 30 ஜனவரி, 2015

பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்-- திருவள்ளூர்: திருவள்ளூரில், 25
அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி,
பட்டதாரி ஆசிரியர் கழகத்தின்
சார்பில், கோரிக்கை முழக்க
ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவள்ளூர் மாவட்ட
பட்டதாரி ஆசிரியர் கழகம்
சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,
கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்,
பெரியகுப்பத்தில் நேற்று நடந்தது. மாவட்டத்
தலைவர் குப்புசாமி தலைமை வகித்தார். மாவட்டச்
செயலர் உதயகுமார் வரவேற்றார்.
பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவனத்
தலைவர் மாயவன், மாநில
மகளிரணி தலைவி செல்வகுமாரி கோரிக்கை விளக்க
உரையாற்றினர். இதில், தேர்வு நிலை,
சிறப்பு நிலைக்கு தனித்தனி ஊதியங்கள்
வழங்க வேண்டும்; தேர்வுப் பணி, விடைத்தாள்
திருத்தும் பணிக்கான உழைப்பூதியம்,
படிகளை மூன்று மடங்காக உயர்த்தித் தர
வேண்டும்; வருமான வரி உச்ச வரம்பை லட்சம்
ரூபாயாக உயர்த்த வேண்டும்
என்பது உள்ளிட்ட, 25 அம்ச
கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், 50க்கும் மேற்பட்டோர்
கலந்து கொண்டனர்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்